குமரி மேற்கு மாவட்டம் ஆற்றூர் பேரூர் துணை செயலாளரும், குமரி மாவட்ட கிறிஸ்தவ சாம்பவர் சமுதாய காவலருமான செல்வின் ஞான பிரகாஷ் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-குமரி மாவட்டத்தில் பெரும்பான்மையான கிறிஸ்தவ சாம்பவர் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கேரளா மாநிலம் மற்றும் தமிழகத்தில் செங்கோட்டை தாலுகாவில் பெரும்பாண்மையாக வசித்து வருகின்றனர். தாய் தமிழகத்தோடு குமரி மாவட்டம் இணைந்த பிறகு தமிழகமெங்கும் பரவி வசித்து வருகின்றனர்.
சனாதன சாதிய அடுக்குகளில் சிக்கிய இந்து சாம்பவர்கள், சுய மரியாதைக்காகவும், சமுதாயத்தில் அங்கீகாரம் அடையவும் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். அரசு கடந்த 1951 வருடம் முதல் கிறிஸ்தவ சாம்பவர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் 2013
ஆம் வருடம் முதல் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழில் “கிறிஸ்தவ சாம்பவர்” என்று
குறிப்பிடாமல் தாழ்த்தப்பட்ட வகுப்புகளில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு
மாறிய வகுப்பை சார்ந்தவர், என்று குறிப்பிடப்பட்டது. இதனால் ஜாதி பெயர் வேண்டுமென்றே திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
சாதிய கட்டமைப்பு கலாச்சார பின்னணியில் இயங்கும் இம்மண்ணில்,முறையான
சாதிப்பெயர் இல்லாத சாதிச் சான்றிதழ்,வழங்கப்படுவது நாளடைவில் கிறிஸ்தவ சாம்பவர் இனத்தின்
அடையாளத்தை அழிப்பதுடன், கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் மற்றும்
சலுகைகளை இழக்கும் சூழ்நிலைகளை உருவாக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது கிறிஸ்தவ சாம்பவர் மாணவர்கள் அரசாங்க வேலை உயர்கல்வியில் சேர்வதற்க்கு சாதியின் பெயரில் சாதி சான்றிதழ் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு இரட்சணிய சேனை சமுதாய நல அமைப்பு மற்றும் தோழமை இயக்கங்கள் தலித் அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து 2016 முதல் “கிறிஸ்தவ சாம்பவர் ” பி.சி என்று சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில்
2020 க்கு பிறகு மீண்டும் பல மாற்றங்கள் செய்து ஆதிதிராவிடர் வகுப்பில் இருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (சாம்பவர் ) என்று அடைப்பு குறிக்குள் சாதிபெயரை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுவருகிறது. மேலும் கல்வி, வேலைவாய்ப்பு சம்மந்தமாக சாதியை குறிப்பிட்டு கணினி மையங்களில் பதிவேற்றம் செய்ய அரசாங்க பதிவுகளில் தேடும்போது சாதி பெயரை கணினி திரையில் எங்கும் காணமுடிவதில்லை. இது மாணவர்களுக்கும் பதிவேற்றம் செய்பவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு கிறிஸ்தவ சாம்பவர் மாணவர்களின் எதிர் காலத்தை விடைதெரியாத கேள்விகுறியாக மாற்றியுள்ளது
தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் காலனி என்ற சொல் இழிசொல்லாக கருதப்படுகிறது. எனவே இனிமேல் காலனி என்ற சொல்லே இருக்காது என உத்தரவிட்டு சமூக நீதியை நிலை நாட்டும் தமிழக முதல்வர்
தமிழகத்தில் வாழும் சாதிபெயரை பதிவேற்ற 16.A என்ற வரிசையை குறிப்பிடும்போது
கிறிஸ்தவ சாம்பவர் என சாதி பெயர் மாநிலம்,மாவட்டம் மற்றும் ஒன்றிய அரசின் அரசுபதிவுகளில்/ கணினிகளில் முறையாக கிறிஸ்தவ சாம்பவர் என்று பதிவேற்றம் செய்ய ஆணையிட வேண்டும்.என திமுக ஆற்றுர் பேரூர் துணை செயலாளர் செல்வின் ஞான பிரகாஷ் மனு அனுப்பியுள்ளார்