ஊத்தங்கரையில் அரசு பள்ளிகளில் குடியரசு தின விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழா தலைமை ஆசிரியர்கள் ராதிகா, பெரியசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவர் அமானுல்லா கலந்து கொண்டு மறைந்த தலைவர் மகாத்மா காந்தி திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேசிய கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பிறகு தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்ந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது அதிமுக மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீத், திமுக நகர செயலாளர் பார்த்திபன், சமூக சேவகரும் அலினா சில்க்ஸ் உரிமையாளருமான பாபு அப்துல் சையத், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தேவராஜ், ஜாபர், ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.