கன்னியாகுமரி ஜன 27
வாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 76 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மேட்டுக்குடி முருகன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஜோஸ்திவாகர் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர் சாம்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ, பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் வாரியூர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்கள் அற்புதராஜ் மற்றும் லதா ஆகியோரின் சிறந்த கல்வி சேவையை பாராட்டி கல்விச்சுடர் விருதை வழங்கி பாராட்டினர். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.