தென்காசி. ஜன.27
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், கொடியேற்றி குடியரசு தின உரையாற்றினார்.
அவர் பேசும்போது,தென்காசி மருத்துவமனை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி, தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் சிறப்பான உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்காசி மருத்துவமனையின் அனைத்து பெருமைகளுக்கும் முக்கிய காரணம் நமது மருத்துவமனை களப்பணியாளர்கள் தான். அவர்கள் தங்களது பணிகளை தொழிலாக,சுமையாக கருதாமல் சேவையாக எண்ணி பணிபுரிந்ததால் தான், நமது மருத்துவமனை இத்தகைய பெருமையை பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்த குடியரசு தின விழாவில்,சிறப்பாக பணிபுரிந்த, நேரடியாகவும் மறைமுகமாகவும் தென்காசி மருத்துவமனையின் வளர்ச்சிக்கு துணைபுரிந்த, களப்பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுறது.
மருத்துவர்கள், செவிலியர்கள் ,மற்றும் பணியாளர்கள் அனைவரும் திறமையாகவும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, பொது மக்களின் நலனுக்காகவும், மருத்துவமனையின் வளர்ச்சிக்காகவும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் தென்காசி மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்த, செவிலியர்கள், மருந்தாளுனர்கள் , ஆய்வுகள் நுட்புணர்கள், செவிலிய உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள், அவசர ஊர்தி ஊழியர்கள் என மருத்துவமனையில் வளர்ச்சிக்கு நேரடியாகவும், வெளியில் இருந்தும் துணை புரிந்த சுமார் 40 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கௌரவித்தார்.
செவிலியர் மாரீஸ்வரி குடியரசு தின சிறப்பு பற்றி பேசினார்.
மூத்த மருத்துவர் சுரேஷ் மில்லர், நலமாக பணிபுரிந்து அடைந்து பணியாளர்களுக்கும், வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறிக் கொண்டார்.
நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் செல்வ பாலா, மருத்துவர்கள் சுரேஷ்மில்லர், விஜயகுமார் ,மகேஷ், கோபிகா ,செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, திருப்பதி, முத்துலட்சுமி ,மருந்தாளுனர்கள் கோமதி, லதா ,செவிலியர்கள் செந்தாமரை செல்வம், சுதா, மேகலா, கார்த்திகா,அனைத்து மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.