கருங்கல், ஜுன் – .1
கருங்கல் காவல் நிலையம் அருகே புல்லத்து விளை பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி கில்பர்ட் (45). மத போதகர். இவருக்கு சஜினி என்ற மனைவியும் 8, 6 வயதுகளில் மகன்களும் 8 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர்.
சம்பவ தினம் வீட்டிலிருந்து குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டது. இது குறித்து அக்கம் பக்கத்து பொதுமக்கள் கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்த போது கிங்ஸ்லி மூன்று குழந்தைகளை கொடூரமாக தாக்கியது தெரிய வந்தது. இதில் ஒரு குழந்தைக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைடுத்து கிங்ஸ்லி கில்பர்ட்டை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தைகள் மீது சாத்தான் புகுந்து விட்டதாகவும் அதனால் சாத்தானை துரத்த கொடூரமாக தாக்கியதாகவும் கூறியுள்ளார்.
போலீசார் மூன்று குழந்தைகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அங்குள்ள காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் குழந்தைகளை அனுப்பினர். இதற்கு இடையே கிங்ஸ்லி கில்பர்ட்டை பற்றி போலீசார் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவரை நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.