போகலூர், நவ. 25 –
அதிமுக முன்னாள் அமைச்சர் கழக மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் மணிகண்டன் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திருப்புல்லாணி ஒன்றியத்தில் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 82 பூத் பி.எல.ஒ. 2 நிர்வாகிகளுக்கு நிதி உதவி வழங்கி நிர்வாகிகளை ஊக்குவித்தார்.
பின்னர் நிர்வாகிகள் இடம் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசுகையில், “2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதியாக உள்ளது. மக்கள் ஆதரவு தற்போது அதிக அளவில் அதிமுகவிற்கு உள்ளது. இதை நிர்வாகிகள் நன்கு பயன்படுத்தி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சர் ஆக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு நிர்வாகிகளும் அயராது உழைக்க வேண்டும். உங்களுக்காக நான் எந்த நேரத்திலும் எந்தவித உதவியும் செய்வதற்கு தயார் நிலையில் இருக்கிறேன்.
அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் பாதுகாக்கப்பட்டு பல்வேறு நலத்திட்டம் மூலம் அவர்கள் நலன் காக்கப்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு தாலிக்கு தங்கம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானியத்தில் இரு சக்கர வாகனம், அதுமட்டுமின்றி அரசு மருத்துவ கல்லூரிகள் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொண்டு வந்ததே அதிமுக அரசுதான். இதை தற்போது மக்கள் நன்கு உணர்ந்து மீண்டும் எப்போது அதிமுக ஆட்சி வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர். அவர்கள் இடம் உங்களை போன்ற கடைக்கோடி நிர்வாகிகள் தான் பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



