தஞ்சாவூர்.மே 23.
தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தின அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலை வழியாக கீழவாசல் காமராஜர் சிலை வரை ராஜீவ் காந்தி படத்துடன் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிஜி ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ், வயலுர் ராமநாதன், ஜான்சன் மாநகர மாவட்ட துணை தலைவர் லட்சுமி நாராயணன் பொருளாளர் பழனியப்பன் சேவா தளத் தலைவர் திருஞானம், எஸ் சி எஸ் டி பிரிவு குமாரசாமி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சாந்தா ராம தாஸ் சங்கர சூரியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் தஞ்சாவூர் மேல வீதியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் அன்பரசன் தலைமை வகித்தார் இதில் ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது மூத்தத்தலைவர் சித்திரக்குடி ஆண்டவர் ,மாவட்ட பொதுச் செயலர் மோகன்ராஜ், வட்டாரத் தலைவர்கள் ரவிச்சந்திர ன் ,நாராயணசாமி, மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தி, மாவட்ட மகளிர் பிரிவு செயலர் சசிகலா, சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.