தஞ்சாவூர் நவம். 6.
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி தஞ்சையில் சோழ பேரரசு வட்ட சுற்றுலா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஒருநாள் சோழப்பேரரசு வட்டச் சுற்றுலா நடைபெற்றது சுற்றுலாவை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் தெய்வநாயகம் தொடங்கி வைத்து சோழர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினார் .இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் ,ஆசிரியர்கள் இன்ஜினியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வரலாற்று அறிஞர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அய்யம்பேட்டை செல்வராஜ் சுற்றுலாவை வழி நடத்தினார் தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து தொடங்கிய சோழப்பேரரசு சிறப்பு வாய்ந்த இடங்களான திருப்புழனம், திருவைக்காவூர் திருபுறம்பியம் போர்களம் சுவாமிமலை ஐம்பொன் சிலைகள் செய்முறை விளக்கம் திருவலஞ்சுழி, தாராசுரம், சோழ மாளிகை, பட்டீஸ்வரம் பஞ்சவன் மாதவி பள்ளி படை கோவில், பழையாறைமாடகோவில் மற்றும் சோமநாதர் கோயில், உடையாளூர் கைலாசநாதர் கோவில், புள்ள மங்கை ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டு மீண்டும் தஞ்சை பெரிய கோவில் முடிவடைந்தது. 9ம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையிலான சோழப்பேரரசு ஆட்சி முறை கட்டிடக்கலை, சிற்பக்கலை, போர்கலை, வாழ்வியல் முறை, வழிபாட்டு முறை, சமய வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கங்கள் பயணத்தின் போது விரிவாக அளிக்கப்பட்டன.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மைய செயலர் ஸ்ரீதரன் கலந்து உண்டு பழையாறை நகரின் சிறப்பை எடுத்து கூறினார். அனைவருக்கும் காலை உணவு மதிய உணவு மற்றும் இரு வேலை சிற்றுண்டி மற்றும் கையேடு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப் பாளர் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் செய்தனர்.