சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் அன்பழகனிடம் கோரிக்கை மனு அளித்தார் அம்மனுவில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல நீலித நல்லூர் தெற்கு ஒன்றியம் மேல இலந்தைகுளம் தடியாபுரம் கிராமங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டியும் அமைத்து தரும் பட்சத்தில் கிராம மக்களுக்கு மிக உதவியாக இருக்கும் எனவும் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் நேரில் மனு அளித்து கேட்டுக் கொண்டார். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பொது மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வரும் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவுக்கு மேல இலந்தை குளம் தடியாபுரம் அப்பகுதி கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
மனு அளிக்கும் நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ் சங்கரன் கோவில் நகர செயலாளர் பிரகாஷ் சேர்மன் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.