தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுரண்டை ரோட்டு மகா கணபதி நகரில் சங்கை ஸ்கேட்டிங் கிளப் துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சொர்ணராஜ், ஓய்வு பெற்ற சப் ரிஜிஸ்டர் காளிமுத்து ,ஓய்வு பெற்ற தொடக்க கல்வி அலுவலர் முத்தையா, ஆசிரியர் பயிற்றுனர் ஆனந்த், ஆசிரியர் இளங்கோ கண்ணன் முன்னிலை வகித்தனர். பாலா வரவேற்றார், நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார் தொடர்ந்து மாணவர்கள் அங்கு ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளி, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், கன்னியாகுமரி மாவட்ட துணை ஆட்சியர் சங்கரலிங்கம் ,ஓய்வு பெற்ற கலெக்டர் நேர்முக உதவியாளர் வெள்ளத்துரை, சங்கரன்கோவில் டிஎஸ்பி அறிவழகன், தாசில்தார்கள் ஆதிநாராயணன், ரவிக்குமார், மைதீன் பட்டாணி, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், யூனியன் துணை சேர்மன் செல்வி, மற்றும்கவுன்சிலர் கள் திமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .ஏற்பாடுகளை மருத்துவர் மாரிராஜ் ,மணலூர் குருசாமி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் வசந்தா தமிழரசன் ஆகியோர் செய்து இருந்தனர் .முடிவில் சங்கை ஸ்கேட்டிங் கிளப் பயிற்சியாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.



