காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் பெய்த மழையினால் தேங்கியிருந்த மழைநீரை மாவட்ட தொழில் மையத்தின் அருகில் உள்ள செங்குளம் ஓடை வழியாக மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று பார்வையிட்டார்.
ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை த்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , தூத்துக்குடி மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்/முதன்மைச் செயலாளர்/ ஆணையர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கோ.பிரகாஷ் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்.எம்.சி.சண்முகையா ,திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், மேயர் பெ.ஜெகன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஆர்.ஐஸ்வர்யா ஆகியேர் உடன் இருந்தனர்.