நாகர்கோவில் செப்.07,
கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும்
தமிழ்நாடு அறிவியல இயக்கம் சார்பில்
நாகர்கோவில் டீம் இல்லத்தில் வைத்து புத்தகம் வெளியீடு நிகழ்ச்சி தேநீருடன் புத்தகங்கள் வாசிப்போம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர்
சசிகுமார் புத்தகம் பற்றிய பாடல் பாட,
கன்னியாகுமரி மாவட்ட பெண் ஆசிரியர் அரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மலர்விழி அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் சிவ ஸ்ரீ ரமேஷ்
புத்தகம் பற்றி அறிமுக உரையாற்றினார்.
பின்பு நடைபெற்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சியில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் உறுப்பினரும் எஸ். எல். பி. பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியருமான முனைவர் ஆனி பீறீடா அவர்கள் எழுதிய ‘யூ கேன் பிகேம் எ கிரேட் டீச்சர் ‘
என்ற புத்தகத்தை
பணி நிறைவு ஆசிரியர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் சசிகுமார் வெளியிட கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பென்னட் ஜோஸ்
பெற்றுக்கொண்டார்.
கூட்டமைப்பு உறுப்பு சங்கங்களை சார்ந்த
சுமகாசன், ஷீபா மோள், கார்மல் மேரி,
ஜெஸி, செந்தில், ஜெரோம் கோபிநாத்,
தோழர் உஷா பாசி
உட்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
நிறைவாக புத்தக ஆசிரியர் ஏற்புரை வழங்கினார்.
அனைவரும் புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.
குமரி மாவட்ட பெண் ஆசிரியர் அரங்கம் சார்பில் புத்தகம் பற்றிய வாசிப்பு அரங்கம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணை தலைவர் டோமினிக் ராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
தோழமை சங்கத்தின் சார்பில்
வேலவன், டெல்லஸ்,
அஜின், மலர் சாலமோன், புஷ்பகனி, சுரேஷ் , ரெக்ஸ் ,சவரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.