தர்மபுரியில் நீட் தேர்வு குளறுபடிகளைக்கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அ. குமார் மாவட்டச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கண்டன உரை இரா. சிசுபாலன் மாநில குழு மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள். இடைக்குழுசெயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கண்டன உரையில் அவர்கள் பேசியதாவது நீட் தேர்வு தொடங்கிய காலம் தொட்டு தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடைபெறு வதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு குளறுபடிகள் உச்சத்திற்கு சென்றுள்ளன. நாட்டில் முதல் முதலாக 67 மாணவர்கள் 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். அரியானா மாநிலத்தில் ஒரு தனியார் தேர்வு மையத்தில் 8 பேர் 720 மதிப்பெண் பெற்றுள்ளது கேள்வி எழுப்பி உள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாக விலக்களித்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக கூறினார்.



