மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் எதிரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.வெ.க நகரப் பொறுப்பாளர் முகமது ஆசிப் தலைமை வகித்தார். தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் குட்டி கோபி கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வக்பு வாரிய சட்டத்தை மத்திய அரசு திருத்துவதை கண்டித்தும், இந்தியாவில் மத வேற்றுமையை உருவாக்கும் மத்திய அரசை கண்டித்தும், வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையினருக்கும் த.வெ.க வினருக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தா.வே.க நிர்வாகிகள் பிரபஞ்சன் ,மனோகர், ரமேஷ், கமல், ரவி, ராஜா, வசந்த், சந்தோஷ், ராஜ்குமார் ,சரவணன் சதீஷ் ஹரிஷ், விக்கி, சதீஷ் ,சூர்யா, மணிகண்டன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



