தஞ்சாவூர். டிச.27.
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேல வஸ்தா சாவடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, அதானி மோசடி, மணிப்பூர், சம்பல் வன்முறையை வாதிக்க மறுத்து, அரசியலமைப்பு சட்ட சிற்பி அம்பேத்கரை அவமதித்து நாடாளுமன்றத்தை முடக்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி விலக கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி ஜி ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி. வரத ராஜன் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் பொருளாளர் பழனியப்பன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் வயலூர் எஸ் ராமநாதன் மாவட்ட பொது செயலர்கள் செந்தில் சிவகுமார் கண்ணன் செயலர்கள் வடிவேல் நாகராஜ் நாகராஜன், ரயில்வே தொழிற்சங்க அசோக் ராஜன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சாந்த ராமதாஸ் நிர்வாகிகள் முருகேசன் ஸ்ரீதர் மகேந்திரன் அன்பழகன் செல்வ சுப்ரமணியன் சம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கான மனுவை மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜனிடம் வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.