டிச. 5
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களை எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணை தலைவர் மன்சூர் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் எதிரே சொத்துவரி உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை , கோவை உள்ளிட்ட நகரங்களை விட திருப்பூர் மாநகராட்சி அதிக வரி உயர்த்தி இருப்பதாகவும் , ஏற்கனவே மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி உள்ள இந்த சொத்து வரி திருப்பூர் பனியன் தொழிலை பாதிப்படையச் செய்யும் என்பதால் உடனடியாக அதனை திரும்ப பெற வேண்டும் , இதற்கு காரணமான திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் , திருப்பூர் மாநகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகாலமாக
திருப்பூர் மாநகராட்சி ஊழல் மட்டுமே செய்து வருவதாகவும் , அதற்கான நிதியை பெறுவதற்காக மக்கள் தலையில் சுமையை சுமத்துவதாகவும் குற்றம் சாட்டினர். விரைவில் மாநகராட்சி நிர்வாகத்தின் ஊழலை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மணி கண்ணன் , வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயமுருகன் , தலைவர் பொன்னுச்சாமி , பல்லடம் காளியப்பன் , நிர்வாகிகள் ஜெயமுருகன், புருஷோத்தமன், ராஜேந்திரன் ,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.