கொட்டாரம் நவ 24
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி தேர்தலில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி போட்டியிட்டு பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதனை கொண்டாடும் விதமாக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உத்தரவின் பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். வர்த்தககாங்கிரஸ் அமைப்பு தலைவர் ஆரோக்யராஜன் செயலாளர் கிங்ஸ்லின்வட்டாரத் தலைவர்கள் முகமதுஷாபி, கிறிஸ்டோபர் வார்டு உறுப்பினர்கள் குறமகள் .பிரபா இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண். துணை தலைவர் ராமமூர்த்தி குணசேகர். சீதராமன் நாகேந்திரன் ராமன் லெட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்