தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி போதைப்பொருட்களான குட்கா, பான்மசலா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்:ஜூன்:15,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி போதைப்பொருட்களான குட்கா, பான்மசலா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் நடவடிக்கையின்பால் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர் நிகழ்வாக, (13.06.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை மேற்கொள்ளும் நபர்களை கண்டறிவதற்கும், இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் சம்மந்தப்பட்ட 9 துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து கூட்டு தணிக்கை மேற்கொள்ள 13 குழுக்களை உருவாக்கி தொடர் ஆய்வு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார். இதில் குறிப்பாக பள்ளி, கல்லூரி வளாகங்களிலும், அதிக மக்கள் கூடும் இடங்களிலும், சந்தேகம்படும் நிலையில் உள்ள பெட்டிகடைகளிலும், தொடர்வண்டி சந்திப்பு பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்து, மேலும் இது தொடர்பான விவரங்கள் ஒவ்வொரு வார திங்கட்கிழமை அன்று நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் தாங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.