வேலூர் மே. 12
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (VIT) நிறுவனர் மற்றும் வேந்தர் கோ. விசுவநாதன் அவர்களுக்கு 2025 மே மாதம் 9ஆம் தேதியன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராசெஸ்டர் தொழில்நுட்ப நிறுவனம் (RIT) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
இந்தியா முழுவதும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மேலாண்மை (STEM) கல்வியை விரிவுபடுத்துவதில் விசுவநாதன் அவர்களின் தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்திற்காகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஆதரவளிப்பதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பிற்காகவும், ராசெஸ்டர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைமையதிகாரி Dr. டேவிட் முன்சன், கல்வி விவகாரங்களுக்கான பேராசிரியர் மற்றும் மூத்த துணைத் தலைவர் டாக்டர் பிரபு டேவிட், விஐடியின் வேந்தருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார்.
இந்த அங்கீகாரம், அமெரிக்க பல்கலைக்கழகங்களால் மூன்றாவது முறையாக ஒரு இந்தியருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
முன்னதாக, வேந்தருக்கு 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா பல்கலைக்கழகமும், 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயோர்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்காம்டன்) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது, கூடுதலாக 2025 ஆம் ஆண்டில் கொல்கத்தா செயிண்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த கௌரவத்திற்கு நன்றி தெரிவித்து, திரு. விசுவநாதன், தனக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்காக ஆர்.ஐ.டி.க்கு நன்றி தெரிவித்தார்.
இந்த விழாவில், வி.ஐ.டி.யின் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன் மற்றும் முனைவர். சேகர் விசுவநாதன், துணைவேந்தர் முனைவர். காஞ்சனா பாஸ்கரன் மற்றும் சர்வதேச உறவுகள் இயக்குநர் முனைவர். ஆர். சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.