நீலகிரி
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தமிழகத்தில் நான்கு நாள் அரசு பயணமாக வந்திருக்கும் நிலையில் நேற்றைய தினம் கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வழியாக உதகை ராஜ்பவன் வந்தடைந்தார்
அவரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ராஜ் பவனில் வரவேற்றார் இதனைத் தொடர்ந்து இன்று 11 மணியளவில் குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெற உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார் அவருக்கு அப்டேட் வித் மி பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது
முன்னதாக 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் உள்ள போர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து இந்திய குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தினார் இந்நிகழ்வில் எம் ஆர் சி கமாண்டன்ட் பிகேடியர் கிறிஸ்தேவ் தாஸ் மற்றும் டி எஸ் எஸ் சி லெப்ட் அண்ட் ஜென்ரல் வீரேந்திர வாட்ஸ் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா மற்றும் பலரும் கலந்து கொண்டனர் பின்பு ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூ கலந்து கொண்டார் இதனால் குன்னூர் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி மற்றும் எம் ஆர் சி பகுதியில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.