மதுரை, செப். 24 –
மதுரையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மருத்துவ இணைச் செயலாளருமான டாக்டர் பா. சரவணன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 79,154 கோவில் உள்ளது இதில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில 46,086 கோவில்கள் கொண்டு இந்தியாவிலேயே அதிகமான கோயில் கொண்ட பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலம் 77,283 கோவில்களும், கர்நாடகாவில் 61,232 கோவில்களும், மேற்கு வங்காளத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோவில்களும், ஆந்திராவில் 47,152 கோயில்கள் உள்ளது. 53 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 31 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து மக்களுக்காக பல திட்டங்களை செய்தது குறிப்பாக இந்து அறநிலையத்துறையில் பல்வேறு சரித்திர சாதனைகளை படைத்து திருக்கோயிலில் புரட்சித்தலைவி அம்மா ஆலயங்கள் தோறும் அன்னதான திட்டத்தினை முதன் முதலில் கொண்டு வந்தார்.
குறிப்பாக எடப்பாடியார் ஆட்சி காலத்தில் எடுத்துக் கொண்டால் 2019 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் 48 நாட்கள் விழா நடைபெற்றது. இதில் ஏறத்தாழ ஒரு கோடிக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்தனர் அதேபோல ஒவ்வொரு நாளும் 25 டன் குப்பைகள் அப்புறப்படுத்தபட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.அந்த விழாவில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் மக்களுக்கு எந்த குறையும் இல்லை என மத்திய அரசே எடப்பாடியாரை
பாராட்டியது. ஆனால் இன்றைக்கு கோவில்களில் உரிய வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படவில்லை.
திருச்செந்தூர் கோவில் கூட கூட்டத்தை சரி செய்யாமல் விட்டதால் கூட்ட நெரிசலில் ஒரு உயிர் பலியானது. அனைவரும் அறிந்ததே. அதே போல 2022 ஆம் ஆண்டு ஆற்றில் கள்ளழகர் இறங்கிய சம்பவத்தில் இரண்டு பேர் கூட்ட நெரிசலில் பலியானார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் கோயில்களில் அதிக நேரம் பக்தர்கள் நிற்கிறார்கள் என்று கேள்வி கேட்டால் துறையின் அமைச்சரோ திருப்பதி போறாங்க 24 மணி நேரம் நிற்கிறார்கள் என்று மக்களை நோகும்படி பொறுப்பில்லாமல் பேசுகிறார்.
அதே போல எடப்பாடியார் ஆட்சியில் 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு விருது வழங்கியது. அதே போல திருப்பதிக்கு நிகராக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்கும் திட்டத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்த ராயர் மண்டபம் தீப்பற்றி எரிந்தது இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இதற்குரிய கற்களை எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
தற்பொழுது இந்த நான்கரை ஆண்டு காலம் இந்து அறநிலையத்துறை என்பது ஒரு விளம்பர வெளிச்சத்தில் துறையின் அமைச்சர் நடத்தி வருகின்றனர். குறிப்பாக எடப்பாடியார் கூறியது போல தமிழகத்தில் நான்கு அதிகார மையங்கள் உள்ளது இதில் துர்கா ஸ்டாலின் அறநிலையத்துறையை தனது கட்டுப்பாடு வைத்துள்ளார் என்று அயப்பாடு மக்கள் மனதில் இருந்துள்ளது.
ஏனென்றால் கேரளாவைச் சேர்ந்த ஜோதிடர்கள் ஆலோசனை பேரில் மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக என்பதற்கு அதிக அளவில் கோவிகளில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று அவசர கோலத்தில் பணிகள் சரியாக முடியாமல் கும்பாபிஷேம் நடத்தப்பட்டு வருகிறது என்று பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் அதை முறைப்படுத்தி செய்ய வேண்டும்.
தற்போது கூட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்தராயர் மண்டப பணிகள் இன்னும் சரிவர நடைபெறவில்லை அதை முடிந்த பின்பு தான் கும்பாபிஷே செய்ய வேண்டும் ஆனால் ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் என்று அறிவித்துவிட்டார்கள் ஏற்கனவே பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களில் பல்வேறு பணிகளை சரி செய்யாமலே கும்பாபிஷேம் நடத்தினார்கள் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் நீதிமன்றம் கோயில் வரும் நன்கொடைகள், நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது என்று அரசுக்கு கொட்டு வைத்துள்ளது. ஆகவே துறையின் அமைச்சர் முதலமைச்சர் குடும்பத்திற்கு சேவை செய்வது ஒருபுறம் இருந்தாலும் மக்கள் எழுப்பி வரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.


