சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மாங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் பௌர்ணமி பூஜையை முன்னிட்டு கிராம மக்கள் 300 க்கும் மேற்பட்ட பால் குடங்கள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மனுக்கு நேத்திக் கடன் செலுத்தினர். இதில் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



