கிருஷ்ணகிரி அக்.20,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் வணிகர்கள் ஆலோசனை கூட்டம் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையில் நடைபெற்றது. வருகின்ற அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் பொது மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள் வாங்கவும், பட்டாசுகள் வாங்கவும் போச்சம்பள்ளியில் குவியத்து துவங்குவார்கள். அப்போது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டது. அதனை தடுக்கும் விதமாக போச்சம்பள்ளியில் உள்ள வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தங்களது கடைகளுக்கு வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை முறையாக நிறுத்த, வாட்ச்மேன் வைக்க வேண்டுமெனவும், கடைகளில் சிசிடிவி கேமாராக்களை பழுது நீக்கி அனைத்தையும் செயல்பாட்டில் வைக்கவும், சிசிடிவி கேமராக்கள் இல்லாத கடைகளில் புதிய சிசிடிவி கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால் காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டுமெனவும் காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டார். அதேபோல் போச்சம்பள்ளி நான்குவழிச்சாலையில் 10 அடி உயர தற்காலிக பரனை அமைத்து அதில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்த வேண்டுமென வணிகர்களின் கோரிக்கையினை காவல் துறையினர் ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். தீபாவளி நாளில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் அனைத்து விதமான முன் ஆலோசனைகளும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. போச்சம்பள்ளி வணிகர்கள் 50ற்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.