கோவை மே:22
பொள்ளாச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஜமாபந்தி முகாம் பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி ஈமச்சடங்கு அறக்கட்டளையின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அறக்கட்டளையின் தலைவர் பாலமுருகன் கூறியதாவது: பொள்ளாச்சி நகராட்சியும், ரோட்டரி கிளப்பும் இணைந்து செயல்பட்டு வரும் மின் மயானத்தில் மனித சமுதாயம் இறந்த பின்பு மயானத்திற்கு எரியூட்டும் கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதால் ஏழை எளியோர்கள் மின் மயானத்தை பயன்படுத்துவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஒரு உடல் ஏரியூட்டப்படுவதற்கு விண்ணப்ப கட்டணம் 250, சடலம் எரியூட்டும் கட்டணம் 500, ரோட்டரி கிளப் டிரஸ்ட் கட்டணம் 1750, அமரர் ஊர்தி கட்டணம் 2000 என சுமார் 4500க்கு மேல் செலவினங்கள் ஆகிறது. இதில் நேர தாமதம் காரணமாக 6000 ரூபாய் வரைக்கும் வசூல் செய்யப்படுகிறது. ஆகவே இந்த கட்டணத்தை குறைக்க ஆவணம் செய்யுமாறு இன்று மனு அளித்திருக்கின்றோம் என்று கூறினார்.
இந்த நிகழ்வில் துணைத் தலைவர் பரகத்துல்லா, செயலாளர் கருணாநிதி, துணைத்தலைவர் முனைவர்.அபு. இக்பால், ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன், பொருளாளர் பத்மாவதி, மக்கள் தொடர்பு அதிகாரி நாகஜோதி, பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், பார்த்திபன், உன்னிகிருஷ்ணன், சிதம்பரநாதன், சக்தி, பாபுராஜ், சுரேஷ், சின்னு, ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.