திருப்பூர்மே:24
திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி முன்பும் புதிய பேருந்து நிலையத்திலும் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் அவர்களின் 1350 வது சதய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் மாநகராட்சி முன்புறம் துணை மேயர் எம் கே எம் ஆர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மன்னருக்கும் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மன்னரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் கலந்துகொண்டு பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் எம் பி சி கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் டிசி சேகர் மாநகர செயலாளர் டாக்டர் எஸ் கண்ணன் மாநகர துணை செயலாளர் உதயகுமார் பிஜேபி மாவட்ட துணை தலைவர் ஜி கே எஸ் பாலு மாவட்ட பொதுச் செயலாளர் அருண் மாவட்ட பொருளாளர் ரவிக்குமார் கொங்கு நகர மண்டல தலைவர் முரளி ராஜாங்கம் மற்றும் செல்வம் மாணிக்கம் கலந்து கொண்டனர்.
பிறகு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள் விழாவில் சமுதாய மக்கள் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவை திருப்பூர் மாவட்டம் முத்திரையர் ஒருங்கிணைப்பு குழு அருண்மொழி வர்மன் தர்மராஜ் வடிவேல் பால்ராஜ் பாண்டி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.