நாகர்கோவில் ஜூன் 7
கன்னியாகுமரி தலைமை அஞ்சலகதில் வைத்து ஜூன் 14 -ல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சல் சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கும் படி கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது :-
இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 14.06.2024 அன்று 11.00 மணியளவில் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் (அல்லது) தங்கள் குறைகளை தபால் மூலமாக அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல்பகுதியில் ‘தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் – ஜூன் 2024 என்று தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். புகார் மனுக்கள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் 10.06.2024. என்று கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் க. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.