அரியலூர், ஜன;07
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்”;; மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காதொலி கருவி வேண்டி மனு அளித்த கல்லங்குறிச்சி ஊராட்சி, சின்னமணக்குடி கிராமத்தைச் மருதமுத்து என்பவருக்கும், மூன்று சக்கர சைக்கிள் வேண்டி மனு அளித்த காட்டுபிரிங்கியம் கிராமத்தைச் சேர்ந்ந கல்யாணி என்பவருக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் உடனடியாக காதொலி கருவி மற்றும் மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 241 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்