தேனி அக் 22:
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பொதுமக்களிடம் கோரிக்கை மணிகளை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பது வழக்கம் இதன்படி திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 330 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது இந்த கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை புதிய வீட்டுமனை பட்டா வேண்டி வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 330 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார் இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் பொது
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி மற்றும் இதர அரசுத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்.