ஜூன் 30: கடையநல்லூர் நகராட்சி ஒரு லட்சத்திற்கு அதிகமான 33 வார்டுகளை உள்ளடக்கிய பெரும் பகுதி ஆகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஆணைய விதிமுறைகள் முடிவடைந்த நிலையிலும் நமது நகராட்சி நிர்வாகம் தலைவர் பொறுப்புக்காக நடைபெறும் உட்கட்சிப் பிரச்சினையால் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
இதனால் மாமன்ற உறுப்பினர்கள் தனது வார்டுக்கு தேவையான சுகாதார பிரச்சனை, தாமிரபரணி கூட்டு குடிநீர் தெரு விளக்கு, குப்பை கிடங்கு,சாலை பராமரிப்பு உட்பட மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மாமன்றத்தில் பேச முடியாமல் மற்றும் தீர்மானித்த பணிகள் எல்லாம் நடைமுறை படுத்த முடியாமல்
முடங்கிக் கிடக்கிறது.
நகராட்சி ஆணையாளர் நகராட்சி மாமன்ற கூட்டம் விரைவில் நடத்த வழிவகை செய்ய வேண்டும் என கடையநல்லூர் SDPI கட்சி சார்பாக கோரிக்கை மனு கொடுத்தனர்
இந்த நிகழ்வில் நகர தலைவர் தாஜுதீன், நகரச் செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஸ்ஸலாம்,
பேட்டை கிளை நிர்வாகி ஹனிபா, மதினா நகர் கிளை தலைவர் ரிபாய், மக்கா நகர் கிளை செயலாளர் ஷாஹுல் ஹமீது செயல்வீரர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டார்கள்