மகாகவி பாரதியார் 103 ஆவது நினைவு தினத்தில் பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு தியாகி சுப்பிரமணிய சிவம் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைப்பாளர் வே.விசுவநாதன் தலைமை தாங்கினார். பேரவை நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நகர தலைவர் டி.தங்கராஜ், பழனி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் மு.சிலம்பரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் எஸ்.ராஜசேகர், ஆர்.கே.பி.கல்யாணசுந்தரம், எஸ்.முனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



