By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அக் -1 -ல் பத்மநாபபுரம் சர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அக் -1 -ல் பத்மநாபபுரம் சர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
கனஂனியாகுமரிமாவட்டம்

அக் -1 -ல் பத்மநாபபுரம் சர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Last updated: September 25, 2024 9:31 am
September 25, 2024 34 Views
Share
SHARE

புதுக்கடை, செப் – 25

 

 

 

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஐ ஆர் இ மணல் ஆலையிலிருந்து கனிமங்களை  பிரித்தெடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1144 ஹெக்டேர் நிலங்கள் குத்தகை எடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் வரும் ஒன்றாம் தேதி பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மீனவ மக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 

      காங்கிரஸ் கட்சி இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்ததாக கூறி மீனவ மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் இருந்தனர். இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம் மீனவர் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் தலைமையில் புதுக் கடையில் நேற்று முன்தினம்  இரவு  நடந்தது.

     மேற்கு மாவட்ட மீனவ காங்கிரஸ் தலைவர் ஜெரோம் வரவேற்றார். கூட்டத்தில் நிலம்  குத்தகைக்கு எடுப்பதாக கூறப்பட்ட கிள்ளியூர் வட்டத்துக்குட்பட்ட மிடாலம், ஹெலன் நகர் ,இனயம், இனயம் புத்தன் துறை, தூத்துர், இரவிபுத்தன்துறை, வள்ளவிளை  போன்ற கடற்கரை கிராமங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். 

        

    கூட்டத்தில் சிறப்புரையாற்றிய  ராஜேஷ் குமார் எம்எல்ஏ பேசுகையில்:-  கடல் மண்ணிலிருந்து ஏழு வகையான தாது பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த தாதுப்பொருட்கள் பிரித்து எடுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதமன்று  3000 கோடி ரூபாயில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் இந்த ஒப்பந்தம் போட்டுள்ளது. அப்பொழுதே நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில்  என்னுடைய கருத்துக்களை பதிவு செய்தேன். குமரி மண்ணிலிருந்து மணல் எடுக்கும் பணியை அனுமதிக்க கூடாது என்பதை நாம் சட்டசபையில் பதிவு செய்தேன். திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. திமுக தவறு செய்தாலும் காங்கிரஸ் தட்டிக் கேட்கும். ஆனால் மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை திமுக கொண்டு வராது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

       அரசு மக்களை பாதிக்க கூடிய திட்டங்களை கொண்டு வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் . கடல் மண்ணிலிருந்து கனிமங்களை பிரித்து எடுப்பது மூலம் புற்று நோய் அதிகமாக பரவுகிறது என்பது அனைத்து மீனவ மக்களும் கூறும் குற்றச்சாட்டு ஆகும்.

     இது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா என்பதற்கான ஆய்வு செய்ய வேண்டும். இப்படி எந்தவிதமான ஆய்வுகளும் செய்யாமல் திடீரென அக்டோபர் ஒன்றாம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறாவதாக அறிவித்துள்ளனர்.  நாளை (இன்று) நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து இந்த திட்டத்தினால் மக்கள் அடையக்கூடிய பாதிப்புகளை எடுத்துக் கூறுவோம். கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றால் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு எனது தலைமையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவிலான முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

      காங்கிரஸ் கட்சி எப்பொழுதுமே மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். ஆகவே அனைத்து மீனவ மக்கள் உட்பட அனைத்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

      கூட்டத்தில் தாரகை கத்பட் எம் எல் ஏ , மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், முன்சிறை வட்டார காங் தலைவர் ரகுபதி, கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகர், மாநில மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜார்ஜ் ராபின்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

முதுகுளத்தூர் அருகே ஊர் பெயர் வழிகாட்டிப் பலகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திமுக, அதிமுகவுக்கு எதிராக தேவர் சமூகத்தினரிடம் நோட்டாவுக்கு ஓட்டு கேட்போம் – தேசிய தேவர் பேரவை தலைவர் செந்தூர் பாண்டி

குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 601 பேருக்கு பணி உறுதி கடிதம்

ராயல் கேர் மருத்துவமனை சார்பில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

August 10, 2024 40 Views
தக்கலை அருகே பெண்ணின் தங்க கொலுசு திருட்டு
குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
2 டாடா ஏஸ் வாகனம் பறிமுதல்
மாவட்டத்திட்டமிடும் குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?