மதுரை ஏப்ரல் 19
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை யில்
தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவு (Trauma Care Centre)
திரு.பெருமாள், 53 வயது, ஆண், I.P.No:12979, த/பெ, கருப்பணன், தெற்குத்தெரு, மார்க்கம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் என்பவர் கடந்த 15.04.2025 அன்று இரவு 07.00 மணியளவில் வேலை முடித்து திரும்புகையில் ஜவ்வாதுபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது தானாக தவறி விழுந்ததில் தலைக்காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனை அவசர விபத்து சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக 16.04.2025 அன்று அதிகாலை 01.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தலைக்காயப்பிரிவு 101 -ICU வார்டில் சிறப்பு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அவர் 17.04.2025 அன்று இரவு 11.45 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது உறவினர்கள் உடல் உறுப்புதானம் செய்ய முன் வந்து அவரது மனைவி கருப்பாத்தாள் அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணாரது உடல் உறுப்புதானம் பெறப்பட்ட விபரம் பின்வருமாறு: உடல் உறுப்புகள் 18.04.2025 அன்று மதியம் முறைப்படி பெறப்பட்டது.
அதன் பின்னர்
வ.எண்:
1.
தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள்
உடல் உறுப்புதானம் பெற்றுக் கொண்ட
மருத்துவமனைகள்.
கல்லீரல்
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை.
2.
சிறுநீரகம் – 1
அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை.
3.
சிறுநீரகம் – 2
காவேரி மருத்துவமனை, கன்டோண்ட்மென்ட், திருச்சி.
4.
கருவிழிகள்
அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை.
5
தோல்
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை.
தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு
மருத்துவமனை சார்பில் அண்ணாரது
பூத உடலுக்கு அரசு இராசாசி மருத்துவமனையின். முதல்வர் அருள் சுந்தரேஸ்குமார்.
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டு உறவினர்களுக்கு
தெரிவிக்கப்பட்டு
பூத உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்கண்ட நபரின் உடல் உறுப்பு தானத்தால் ஐந்து நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் அன்னாரின் உடல் உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது.