மதுரை ஜூலை 17,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள கூடுதல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆணைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் அலுவலர்களுக்கு வழங்கினார் அருகில் மாநகர் நலஅலுவலர் மரு.வினோத்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், முதன்மை மருத்துவ அலுவலர் மரு.ஸ்ரீகோதை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.