திருவள்ளூர் மாவட்டம் ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800 க்கு மேல் மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றன இந்நிலையில் பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு என பயின்று வரும் மாணவன் மாணவியர்களிடம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜுவ் தங்களது உயர்நிலை படிப்பை முடித்து செல்லும் மாணவர்களிடம் தங்களது வகுப்பறைக்கு தாங்களே காசு போட்டு வர்ணம் வாங்கி தீட்டி கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார் தலைமை ஆசிரியரின் உத்தரவின் பெயரில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் பெற்ற பணத்தில் பெயிண்ட் வாங்கி வந்து தங்கள் வகுப்பறைக்கு தாங்களாகவே வர்ணம் தீட்டியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் நிலையில் இப்படிப்பட்ட செயலை செய்ய வைத்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புறங்களில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்கு அமைய வேண்டும் என்று பள்ளிக்கு படிக்க அனுப்புகின்றனர் ஆனால் அத்தகைய நிலை மாறி ஆபத்தை உணராமல் மாணவர்களை வகுப்பறைக்கு வர்ணம் தீட்ட சொல்லி வகுப்புகள் புறக்கணித்திருப்பது பெற்றோர்களின் மனதை புண்படுத்தி உள்ளது.
மேலும்
பள்ளி கட்டிடத்திற்கு
வர்ணம் அடிக்கச் சொன்னது அதிகாரிகள் என்றால் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லையா ?
அப்படி சமூக தொண்டாட்டும் தலைமை ஆசிரியர் என்றால் தனது சொந்த நிதியில் வேலையாட்களை வைத்து வேலை செய்திருக்க வேண்டும் மாறாக மாணவர்களை வைத்து வண்ணம் தீட்டியதுதான் பெரும் கேள்வியாக உள்ளது.
இது போன்ற செயல்கள் இனி வரும் காலங்களில் எப்பள்ளியிலும் நடக்கக்கூடாது என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.



