கன்னியாகுமரி செப் 5
தமிழ்நாட்டில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நேற்று மற்றும் இன்றும் தமிழக முழுவதும் உள்ள கடற்கரை பகுதியில் நடைப்பெற துவங்கியுள்ளது,அந்த வகையில் முதல் நாளான செப்டம்பர்.04 ம் தேதி கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம் உள்ளிட்ட மீனவ கிராம கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகில் சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர் . ஒத்திகையில் கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் ஈடுபட்டார்.