தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை
மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர். அக்.10.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடக்கிழ க்கு பருவமழை -2024 தொடர்பான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் பொருட்டுமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது பற்றி மாவட்டஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணியாக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டு, சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பொதுமக்கள் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக பாதிப்புகள், கோரிக்கை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண் 1077, தொலைபேசி எண் 04362 – 230121, வாட்ஸ் அப் எண் 9345088997 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளவும், மேலும் பேரிடர் தொடர்பாக TN AIERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் இந்த கைபேசி செயலியனை Google Play Store மற்றும் I05 App store இல் பதிவிறக்கம் செய்து தங்களது பகுதியில் மழை போன்ற வானிலை முன்னறிவிப்பு செய்திகளைதெரிந்து கொள்ளலாம். புகார் மற்றும் கோரிக்கைகளையும் ,தெரிவித் திடலாம்.
மேலும்தஞ்சாவூர் மாவட்டத்தில் 51 மழைமானிகள், 19முன்னெச்சரி க்கை ஒலி எழுப்பும் கருவிகள் செயல்பாட்டில் உள்ளது.
4550 முதல் நிலை மீட்பாளர்கள், 300அப்தமித்ரா தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர் . இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.