தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுக்கா தொப்பையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் சதீஷ் அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் வாய்க்காலில் தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர். அப்போது ஆட்சியர் கூறுகையில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கிட்டு பணிகளில் நீர்வள ஆதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். என்று தெரிவித்தார். இந்த தண்ணீர் திறப்பின் மூலம் தருமபுரி மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 2,050 ஏக்கர் நிலமும், சேலம் மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 3,280 ஏக்கர் நிலமும், மொத்தம் 5,330 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருகின்ற 11-5 -2025 வரை 70 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர், கம்பம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள செக்காரப்பட்டி, வெள்ளார், மல்லிகுந்தம் கிராமங்கள் என மொத்தம் ஆறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் செந்தில் குமார், உதவி செயற்பொறியாளர் கணேஷ், உதவி பொறியாளர் மோகனப்பிரியா, திமுக ஒன்றிய செயலாளர் மல்லமுத்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



