கன்னியாகுமரி செப் 30
தென்தாமரைகுளத்தில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா மற்றும் ‘‘உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுவோம்” என்ற தலைப்பில் அ.தி.மு.க குடும்ப சங்கம விழா நேற்று (29-09-2024) காலை தென்தாமரைகுளம் தனியார் மஹாலில், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தாமரை தினேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் கையொப்பமிட்டு வழங்கப்படுகின்ற புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டின் மூலம் தொண்டர்களுக்கும், பொதுச் செயலாளருக்கும் நல்லுறவை ஏற்படுத்துகிறது. உறுப்பினர் உரிமைச் சீட்டு மிக இன்றியமையாததாகும். உரிமைச் சீட்டு வருகின்ற தேர்தல் முதல் கழகப் பணிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கழகத்தில் பெருமளவு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு பூத்திற்கும் திறமையான முகவர்களை தேர்வு செய்து, அவர்கள் மூலமாக நமது கழகத்தில் இளைஞர்களை அதிகளவில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கையினை கழகப் பொறுப்பாளர்கள் எடுக்க வேண்டும். விடுபட்ட கழக தொண்டர்களுக்கு உறுப்பினர் உரிமைச்சீட்டு கிடைப்பதற்கு சம்மந்தப்பட்ட ஒன்றிய செயலாளர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து புதிய உறுப்பினர் சீட்டு வழங்கிட வேண்டும். என அவர் பேசினார்.
இவ்விழாவில் அ.ம.மு.க கட்சியில் இருந்த மாவட்ட துணைச் செயலாளர் பெரியவிளை எ.கண்ணன் (முத்துகுமார்), அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தை சார்ந்த ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மணிகண்டன், மாவட்ட மகளிரணி செயலாளர் மேகலா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், கொட்டாரம் பேரூர் செயலாளர் பெரியவிளை எம்.முருகன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி தளவாய்சுந்தரம் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர். அவர்களுக்கு தளவாய்சுந்தரம் வாழ்த்து தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தென்தாமரைகுளம் பேரூர் கழகச் செயலாளா டேனியல் தேவசுதன் வரவேற்று பேசினார். கழக அமைப்புச் செயலாளர்கள் சுதாபரமசிவன், சின்னத்துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்;, கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஜெஸீம், முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், பொருளாளர் தங்கவேல், மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலமுருகன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, சாமிதோப்பு ஊராட்சி பொறுப்பாளர் பார்த்தசாரதி, தலைமைக் கழக பேச்சாளர் அன்பழகன், கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயகோபால், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கொட்டாரம் வார்டு உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார்.