ஆரல்வாய்மொழி, டிச.25;
கருங்கல்லில் உள்ள தனது பேத்தியை பார்க்க சென்ற சிதப்பால் பகுதியை சேர்ந்த மூதாட்டி மாயமானதால் பரபரப்பு
தாழக்குடி சீதப்பால் மேல குளத்தங்கரை பகுதியை சார்ந்த பிரான்சிஸ் என்பவர் மனைவி சவ்ரியாய் – 85, இவருக்கு எவரெஸ்ட் மற்றும் சபரிமுத்து என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர்.இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் இவர் தனது இரண்டாவது மகனான சபரி முத்துவுடன் வசித்து வருகிறார்.சபரிமுத்துவின் மகள் சந்தியாவை கருங்கல் பகுதியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் சீதப்பாலில் இருந்து கருங்கல்லில் உள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக நாகர்கோவில் செல்லுகின்ற அரசு பேருந்தில் ஏறி சென்றுள்ளார்.இதனிடையே சபரிமுத்து தனது மகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது தாய் சவ்ரியாய் உன்னை பார்பதற்காக கருங்கல் வருவதாக சொல்லி கொண்டு அங்கு பேரூந்தில் ஏறி வந்தார்கள். அங்கு வந்துவிட்டார்களா என கேட்டுள்ளார் ஆனால் தனது தாய் தனது மகள் வீட்டிற்கு வரவில்லை என தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தார் இதனால் பல பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்த நிலையில் வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையங்களில் சென்று தேடிப் பார்த்த பின்பும் அவரை காணாத நிலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் புகாரியின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.சீதப்பாலில் இருந்து நாகர்கோவில் சென்று அங்கிருந்து கருங்கல் பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலையில் தவறுதலாக வேறு ஊருக்கு செல்லுகின்ற பஸ்ஸில் ஏறி சென்று இருக்கலாம் எனவும் இது சம்பந்தமாக சீதப்பாலில் இருந்து நாகர்கோவில் சென்ற பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்தினடமும் விசாரிப்பதுடன் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இவர் வேறு ஏதேனும் பஸ்ஸில் ஏறுகிறது பதிவாகியுள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்துவதாக போலீசார் தெரிவித்தனர்