சுசீந்திரம், ஏப் 30
நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் சுயம்பு வயது 80, இவர் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராஜகோபால் என்பவரின் தென்னந்தோப்பு பிள்ளையார்புரத்தில் உள்ளது அந்த தென்னந்தோப்பில் உள்ள அறையில் சுயம்பு தங்கி இருந்து 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்ததாகவும், இவருடைய குடும்பத்தினர்கள் தூத்துக்குடியில் வசித்து வருவதாகவும், சுயம்பு கடந்த சில தினங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றிய நிலையில் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் சுயம்பு தங்கி இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ராஜகோபாலுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ராஜகோபால் இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தார்.
தகவலின் பெயரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள அறையின் கதவை உடைத்து பார்க்கும்போது அழுகிய நிலையில் சுயம்பு இறந்து கிடந்தார். உடனே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.