தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில் மேம்படுத்தும் பணியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், சுற்றுலாத்துறை இணை இயக்குநர் புஷ்பராஜ், சுற்றுலாத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், உதவி சுற்றுலா அலுவலர் பா.கதிரேசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



