வேலூர் 23
தமிழ் பாடபுத்தகங்களில் வட மொழிஎழுத்துக்களை தவிர்க்க வேண்டும் – ஆங்கிலம் எவர் ஹிந்தி நெவர் – இந்து சமய அறநிலையத்துறையை தமிழ் சமயங்கள் அறநிலையத்துறை என பெயர் மாற்றினால் என்ன – வேலூரில் நடைபெற்ற உலக தாய்மொழி நாள் விழாவில் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா பேச்சு
வேலூர்மாவட்டம்,வேலூர் நகர அரங்கில் வேலூர் கம்பன் கழகம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா வேலூர் கம்பன் கழக தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழறிஞர்கள் சோலைநாதன்,ஞானவேல்,லட்சுமிபதி இளங்கோவன்,மருத்துவர் இனியன் சமரசம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இவ்விழாவில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு முற்றிலும் தமிழில் பேசுவது எழுதுவது உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டு வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா மற்றும் செல்வம் ஆகியோர் வழங்கினார்கள் இதில் மாணவ,மாணவிகள் மற்றும் தமிழார்வலர்கள் தமிழறிஞர்கள் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்
இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா கலந்துகொண்டு பேசுகையில் தமிழ் மொழி பிற மொழி கலப்பு ஏற்பட்டதால் தான் தமிழ் மொழி வளர்ச்சி குன்றியது மேலும் பாரதியார் சொல்கிறார் பேசும் மொழி 18 உடையாள் பாரத அன்னை என அவள் வேண்டுமானால் 18 மொழியை கொண்டிருக்கலாம் குஜராத் காரனிடம் குஜராத்திலும் அசாமியிடம் அசாமியிலும் பேச வேண்டியதோ அத்தனை மொழிகளையும் கற்க வேண்டிய அவசியம் கிடையது ஆங்கிலம் மட்டும் தொடர்பு கொள்ள மொழியாக இருந்தால் போது ஆங்கிலம் எவர் ஹிந்தி நெவர் மேலும் இன்றைய காலத்தில் 12 உயிர் எழுத்துக்கள் 18 மெய் எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் தமிழ்பாடபுத்தகத்தில் இருந்தால் போதும் ஆனால் வட மொழி எழுத்துக்களான ஷா,ஸ் உள்ளிட்டவைகள் தமிழ் பாடபுத்தகத்தில் அச்சிடப்படிருக்கிறது இவைகள் தவிர்க்கபட்டிருக்க வேண்டும் மேலும் தமிழை வளர்க்க இதை போல் பல கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் வள்ளலாருக்கு இந்து மதம் என்றாலே தெரியாது எனக்கு ஒரு யோசனை இந்து சமய அறநிலையத்துறை என்பதை தமிழ் சமயங்கள் அறநிலையத்துறை என பெயர் மாற்றம் செய்தால் நல்லது என பேசினார்



