காரைக்குடி, அக். 07 –
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாக வீறுகவியரசர் முடியரசனார் அரங்கத்தில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ் பண்பாட்டு மையம் நுண்கலைத்துறை மற்றும் வீறுகவியரசர் முடியரசனார் அவைகளம் ஆகியவை இணைந்து நடத்திய வீறுகவியரசர் முடியரசனார் வெள்ளணி விழாவில், வீரகவியரசர் விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கோவி.செழியன் ஆகியோர் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை
வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா. மாங்குடி, காரைக்குடி மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மதிப்புறு கர்னல் பேரா.க. இரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புரவலர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், வீரகவியரசர் முடியரசனார் அவைக்கள செயலாளர் முனைவர் தமிழ் முடியரசன், இணைச்செயலாளர் முனைவர் இரா. வனிதா, ஏ.சி.என். கல்வி தொண்டு அறக்கட்டளை தலைவர் அரிமா டாக்டர் நா. சந்திரபாபு, நுண்கலைத்துறை தலைவர் மூத்த பேரா. சே. செந்தமிழ்ப்பாவை, தொழிலாளுனர் ஆசிரியர் சா. இராமன், மருத்துவர் அமலன், கணினிப் பொறிஞர் இராம. பழனியப்பன், முதல்வர் (ப.நி) சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேராசிரியர் இரெ.சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



