கன்னியாகுமரி ஜன 23
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்போது அப்பகுதியில் கஞ்சா மற்றும் புகையிலைப்பொருள் விற்பனைக்காக வைத்திருந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த கேகிதெரோன் என்பவரின் மகன் இம்தோராங்க்(46), என்பவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட 75 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரதாப் சிங் என்பவரின் மகன் பீட்சிங்(30) என்பவரிடமிருந்து புகையிலைப்பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தீவிர நடவடிக்கையால் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா,குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.