தஞ்சாவூர் ஆகஸ்ட் 30.
விநாயகர் சிலைகளுக்கு நச்சி கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பூச வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள் ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு பெரிய கடமை இருக்கிறது .நீர் நிலைகள் (கடல் ஆறு குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத் தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியோர் அளித்துள்ள வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும்.
களிமண்ணால் மட்டும் செய்யப் பட்ட பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் அல்லது தெர்மாகோல் சேர்க்கப்படாத சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகள் மட்டும் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப் படுகிறது.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம் .சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களில் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் செயற்கை ரசாயன பொருள்களை பயன்படுத்தக் கூடாது .ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளு க்கு வர்ணம் பூசுவதற்கு சுற்றுச் சூழல் உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நச்சு மற்றும் மக்காத ரசாயனசாயம் எண்ணெய் வண்ண ப்பூச்சிகளை கண்டிப்பாக பயன் படுத்தக்கூடாது.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினரால் குறிப்பிடப் பட்டுள்ள இடங்களில் ( வடவாறு, கல்லைணை கால்வாய், காவிரி ஆறு ,வீர சோழன் ஆறு மற்றும் மல்லிப்பட்டினம் கடற்கரை) மட்டும் கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது