கோடை சீசனுக்காக தொடங்கும் கோத்தகிரி நேரு பூங்கா தயார்படுத்தும் பணிகளை கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலர்கள் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் , இந்த பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்துக்குள் முடிவடைந்து வருகிற மார்ச் மாத தொடக்கத்தில் மலர்கள் பூத்து குலுங்குவதுடன் காய்கறி கண்காட்சிக்கு பூங்காவும் தயாராகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . இந்த வருடம் தொடங்கும் காய்கறி கண்காட்சியில் மலர் அலங்காரம் மற்றும் காய்கறிகளை கொண்டு அமைக்கப்படும் அரங்குகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் பற்றிய விளக்க அரங்குகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



