By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் திருட்டு வழக்கில் புதுமண தம்பதி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் திருட்டு வழக்கில் புதுமண தம்பதி கைது
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

கன்னியாகுமரியில் திருட்டு வழக்கில் புதுமண தம்பதி கைது

Last updated: June 19, 2024 8:41 am
June 19, 2024 1.7k Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 16

 

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள முளவிளை பூவன்கோடு பகுதியை சேர்ந்த 50 வயதாகும் பரமசிவன் தொழில் அதிபர் ஆவார். பரமசிவன் பூவன்கோடு சந்திப்பில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நகை கடைக்கு கடந்த ஜூன் 10-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு மோட்டார் சைக்கிளில் புதுமணத்தம்பதியாக ஒரு ஆணும், பெண்ணும்  நகை கடைக்கு வந்துள்ளனர்.

 

புதுமணத்தம்பதி தங்களுக்கு 4 கிராம் மோதிரம் வேண்டும். அதில் விதவிதமான மாடலை காட்டுங்கள் என கூறியுள்ளார்கள். அரை மணி நேரமாக ஒவ்வொரு மாடலையும் புரட்டி, புரட்டி பார்த்த இருவரும் திருப்தி இல்லை என கூறிவிட்டு கிளம்பி சென்றுவிட்டனர்.அன்று இரவு நகை கடை உரிமையாளர் பரமசிவன் கடையை பூட்டும்போது நகைகள் மற்றும் மோதிரத்தை கணக்கெடுத்தார். அப்போது 2 கிராம் எடை கொண்ட 2 மோதிரங்கள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 மோதிரங்களை புதுமணத்தம்பதி எடுத்துச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

 

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கடைக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ஆண், பெண்ணின் உருவம் தெளிவாக தெரியாத நிலை இருந்தது. எனினும் அந்த பகுதியில் உள்ள கேமராவை ஆய்வு செய்தபோது ஆணும், பெண்ணும் சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவெண் தெளிவாக தெரிந்தது.இந்தநிலையில் கடந்த 13ம் தேதி திருவட்டார் போலீசார் சுவாமியார் மடத்தில் சோதனையில் ஈடுபட்ட போது பரமசிவன் நகை கடையில் திருடிய திருவிதாங்கோடு கேரளபுரத்தைச் சேர்ந்த இர்ஷாத் (23), அவரது மனைவி அனிஷா என்ற இர்பானா (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் புதுமண தம்பதி என்பது தெரியவந்தது. அவர்கள் நகை கடையில் இருந்து எடுத்த 2 மோதிரமும் மீட்கப்பட்டது.

 

பின்னர் கைதான இர்ஷாத் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அப்போது கூறிய தகவல்களை போலீசார் வெளியிட்டனர். இர்ஷாத்தின் சொந்த ஊர் திருவிதாங்கோடு ஆலடிகுன்று காலனியாகும். இவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதற்கு மேல் படிக்காமல் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கமும், கஞ்சா புகைக்கும் பழக்கமும் உண்டாம்.கடந்த வருடம் திங்கள்சந்தை பஸ்நிலையம் அருகே அனிஷா என்பவரை இர்ஷாத் பார்த்துள்ளார். அவரை பார்த்த உடன் பிடித்துள்ளது. இதனால் அவரை திருமணம் செய்ய விரும்பி உள்ளார். அவரிடம் பேசி பழகி, காதலித்துள்ளார். அப்போது அனிஷா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பதை அறிந்துள்ளார் இர்ஷாத். எனினும் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். பிறகு அனிஷாவின் பெயரை இர்பானாவாக மாற்றி 7 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் அவரது மனைவி இர்பானாவுக்கு எப்போதும் பணம் கையில் இருக்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது. தன் மனைவியின் குணமும், தன்னை போலவே இருப்பதை கண்ட இர்ஷாத் அவருக்காக செய்த செயல் தான் தறபோது கைது வரை கொண்டு சென்றுள்ளது. பணத் தேவைக்காக திருடலாம் என்று முடிவு செய்து, மனைவியின் ஆசையை நிறைவேற்றி உள்ளார். அதற்காக இருவரும் கடந்த மே மாதம் 24-ந் தேதி கருங்கலில் உள்ள நகை கடைக்கு சென்றுள்ளார்கள்.அங்கு நகை கடையின் வெளியே இர்ஷாத் நின்றுள்ளார். இர்பானா மட்டும் உள்ளே சென்று நகைகள் வாங்குவது போல் நடித்து 2 மோதிரத்தை நைசாக திருடி உள்ளார். இந்த சம்பவத்தில் இருவரும் சிக்கவில்லை. பிறகு இதேபோல் பூவன்கோட்டில் உள்ள நகைகடையிலும் திருடி உள்ளார்கள். ஆனால் இந்த முறை கண்காணிப்பு கேமரா காட்சியால் போலீசில் சிக்கியுள்ளனர். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.

You Might Also Like

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்

பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

இரு சக்கர வாகன எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன்

October 29, 2024 26 Views
ரூ.20 1/2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
குமரியில் பெருகிவரும் கனிமவள டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்து
மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து உலகசாதனை
இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?