கிருஷ்ணகிரி டிச 30: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாஜக மண்டல் தலைவர்களுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்று, மண்டல் தலைவர்களாக கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணகிரி நகர் மண்டலத்திற்கு திருமதி. விமலா, கிருஷ்ணகிரி மேற்கு மண்டலத்திற்கு பழனி, காவேரிப்பட்டினம் தெற்கு மண்டலத்திற்கு சக்திவேல், காவேரிப்பட்டினம் மேற்கு மண்டலத்திற்கு குமார், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் மத்திய மண்டலத்திற்கு பாலாஜி, காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டலத்திற்கு சாமிநாதன், காவேரிப்பட்டினம் வடக்கு மண்டலத்திற்கு திருமதி. சுகந்தி, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் மேற்கு மண்டலத்திற்கு திருமதி. ராஜேஸ்வரி, மண்டல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டனர். புதியதாக தேர்வு செய்ய பட்டவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி திரு.சரவணன், மாவட்ட தலைவர் KSG சிவபிரகாஷ், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட துணை தலைவர்கள் திருமதி.ஜெயலட்சுமி, MR. ராஜேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அங்குள்ள அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வரும் காலத்தில் பாஜகவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, அயராது உழைப்போம் எனவும், மத்திய அரசின் திட்டங்களை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்வோம் எனவும் தெரிவித்தனர்.
கிழக்கு மாவட்ட பாஜகவில் புதிய மண்டல்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics