தஞ்சாவூர். ஜன.18.
தஞ்சாவூர் அடுத்துள்ள திருவையாறு ஒளவை கோட்ட வளாகத்தில் அயலக அறிஞர்களுக்கு வரவேற்பும், பொங்கல் கலைவிழா சிறப்பாக நடந்தது.
விழாவில் ஒளவை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் கலைவேந்தன் தலைமை வகித்தார். மெலட்டூர் பாகவத மேளா வித்யாலயா பெங்களூர் பிரியம்வதா முரளி முன்னிலை வகித்தார்.பேராசிரியர் முனைவர் இரமாமணி,பிரான்ஸ் ஜெனிவா
பேராசிரியர் அலெக்சாண்டர் ஷீஃபா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஔவை மழலையர் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளின் பாத நாட்டியம், சிலம்பாட்டம், இசைக் கருவிகள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது
இலங்கை, மட்டக்களப்பு, கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வாளர் கு. தவசீலனின் “கர்மக்கோட்பாடு – சைவசித்தாந்த, பௌத்த நோக்கு” என்ற நூல் வெளியிடப்பட்டது.
தமிழ்கலை பண்பாடு வளர்த்தமைக்காக ஒளவை கோட்ட நிறுவனர் முனைவர் கலைவேந்தனுக்கு பிரான்ஸ் நாட்டின் உலகம் ஒரே குடும்பம் என்ற அமைப்பு சார்பில் கலை வளர்க்கும் கலைக்காவலர் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை ஆசிரியை தீபா தொகுத்து வழங்கினார்.
பள்ளி தலைமையாசிரியர் கோகிலா வரவேற்றார், ஆசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை
மெலட்டூர் பாகவதமேளா வித்யாலயா, ஔவைக் கலைக்கூடம், திருமானூர் திருவள்ளுவர் பல்கலைக்கூடம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.