காஞ்சிபுரம் ஏப்ரல் 20
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தெற்கு ஒன்றியம் தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் செயலாளர் எஸ்.பி.கே தென்னரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று
ஆனம்பாக்கம் ஊராட்சியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், தமிழகத்திலுள்ள அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் பொதுமக்களின் உடல் வெப்பம் மற்றும் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றி கழகம் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக
இந்த பகுதியில் பொது மக்களுக்கு நீர் மோர் பந்தல் திறப்பு விழா, நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, த.வெ.க உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜி. பிரதீபன் தலைமையேற்றார். உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய நிர்வாகி எஸ். மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றி கழகம் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு, தர்பூசணி, ஜுஸ், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.பி.டி.கே ராஜசேகர் உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.